வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (11:26 IST)

மீண்டும் அம்மாவாகப்போகும் சினேகா - சில்பிளான சீமந்தம்!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான சினேகா புன்னகை அரசி என அழைப்பட்டு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவர். இளமையான புன்னகைக்கு சொந்தக்காரரான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே'  படத்தின் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். 


 
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த இவர் 2000ம் காலகட்டங்ககளில் இயக்குனர்களின் ராசியான நடிகையாக நடிகையாக பார்க்கப்பட்டார்.  தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்',  உள்ளியிட்ட படங்களில் பரவலாக பேசப்பட்டாலும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது. 


 
இதற்கிடையில் 2009ல் வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்த சினேகா பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து அவரை கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.  அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். 


 
இதற்கிடையில் மனைவி சினேகா மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் பிரசன்னா பேட்டி ஒன்றில் கூறினார். இந்நிலையில் தற்போது சினேகாவுக்கு முறைப்படி பாரம்பரிய சீமந்தம் மிகவும் சிம்பிளாக நடந்துள்ளது. அவரது குடும்பத்தினர் சீமந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சினேகா-பிரசன்னா தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.