வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (12:50 IST)

ராஷி கண்ணா நடத்திய சென்ஷேஷ்னல் போட்டோ ஷூட்

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்",  ‘கடைசி விவசாயி’  போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
 

 
இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. 


 
கவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வரும் அம்மணி சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு படுமோசமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். 


 
கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவங்களும் இப்படி போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்று புலம்பி வருகின்றனர்.