வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:39 IST)

துளி மேக்கப் போடாமல் எடுத்த போட்டோவாம்.... சரி அது ஏன் கண் கூசுற மாதிரி ஃபில்டர்?

தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் 
பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் பட வேலை ஏதுமில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஞ்சலி சமூக வலைத்தளத்தில் முழு நேரத்தையும் செலவிட்டு அடிக்கடி எதையேனும் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது துளி கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட இணையவாசிகள்,  தைரியம் இருந்தால் ஃபில்டர் இல்லமா போட்டோ போடுங்க பார்ப்போம் என சவால் விட்டு வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And wen all the glitter fades there’ll still be stardust in her veins.. #happy #weekend #saturday #selfie

A post shared by Anjali (@yours_anjali) on