1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:15 IST)

தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்- நடிகர் தற்கொலை!

தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்- நடிகர் தற்கொலை!
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்த ஒருவர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தவர் குமார் ராஜன் என்பவர் கடந்த சில நாட்களாக தனக்கு சொந்தமான நாமக்கல் வீட்டில் இருந்து வந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது/ இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து குமாரராஜனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பிரேத பரிசோதனைக்கு முடிவுக்கு பின்னரே இது தற்கொலையா? அல்லது கொலையா என்பது குறித்து தீர விசாரிக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர் 
 
’சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து தயாரித்த குமாரராஜா தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து அவரது உறவினர்களுக்கு பெரும் மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்