1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (17:03 IST)

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்த பிரசாந்த்!

நடிகர் பிரசாந்தும் அவரின் தந்தை தியாகராஜனும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அரசு மற்றும் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டால் இப்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க முதல்வர் மக்களிடம் நிவாரண நிதியளிக்கும் படி கேட்டிருந்தார். அதையடுட்து பொதுமக்கள் பலரும் பிரபலங்களும் நிவாரண நிதியளித்தனர்.

இந்நிலையில் இப்போது நடிகர் பிரசாந்தும், அவரின் தந்தை தியாகராஜனும் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியளித்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.