1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (11:09 IST)

எவ்வளவு சம்பாதிச்சாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க! – நடிகர் கார்த்திக்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி விவசாயம் குறித்து மக்களிடையே பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கிளாம்படி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் காலிங்கராயன் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முளைப்பாரியை காலிங்கராயன் வாய்க்காலில் விட்டு மரியாதை செலுத்தினார். பிறகு கால்வாய் மீட்பு குறித்து மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் காலிங்கராயன் வாய்க்காலில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டு விட கூடாது என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் முன் வந்து போராடுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.