1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (08:38 IST)

வரலாற்றுக்கதையை கையில் எடுக்கும் ஆரண்யகாண்டம் இயக்குனர்!

இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் அடுத்த படம் வரலாற்றுக் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்துக்குப் பின்னர் அவர் தனது அடுத்த படத்துக்கான கதையை எழுத தொடங்கியுள்ளாராம். இந்த கதை வரலாற்று பின்னணி கொண்ட கதை என சொல்லப்படுகிறது.