1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:19 IST)

சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது உதை வாங்குவார்: டுவிட்டரில் மிரட்டல்

சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது வன்னியர் ஒருவரிடம் அவர் உதை வாங்குவார் என டுவிட்டரில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்திற்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் சூர்யாவை உதைக்கும் இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார் என்பதும் அவரது அறிவிப்புக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது ஒரு வன்னியர் அவரை உதைத்து ரூபாய் ஒரு லட்சத்தை வாங்குவார் என டுவிட்டரில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.