1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:02 IST)

இந்தியாவுக்காக பிராத்தனைகள்… ரஹ்மானின் டிவீட்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கொரோனா பரவல் குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமான பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதனால் நிலைமை கைமீறி செல்லும் இந்த நிலையில் பலரும் இந்தியாவுக்காக பிராத்தனை செய்யுமாறு டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ‘இந்தியாவுக்காக பிராத்தனைகள்’ என டிவீட் செய்துள்ளார்.