வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (10:43 IST)

காதலனுடன் ‘அது’ ஏற்பட்டதால் பிரபல தொகுப்பாளினி தற்கொலை

ஜெய்பூரில் பிரபல தொகுப்பாளினி ராதிகா காதலருடன் ஏற்பட்ட சண்டையால் 4 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ராதிகா கௌசிக் என பெண் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். இவர்  நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். ராதிகாவும் ராகுல் என்பரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று ராகுல், ராதிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராதிகா 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.