வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (10:28 IST)

போதைப்பொருளுடன் போலீசில் சிக்கிய பிரபல நடிகை

கேரளாவில் பிரபல  சீரியல் நடிகை போதை பொருட்களுடன் போலீசில் பிடிப்பட்டுள்ளார்.


மலையான சீரியல்களிலும், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஸ்வதி பாபு .  கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில், போதைப்பொருள் இருப்பதாக, தீர்க்ககாரா காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மெய்மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைபொருளோடு இருந்த நடிகை அஸ்வதி பாபுவையும், அவர் கார் ஓட்டுநரான பினோய் ஆப்ரஹாமையும் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.