1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (12:37 IST)

விக்கி- நயன் இரட்டை குழந்தைகள் விவகாரம்: 3 பேர் கொண்ட குழு விசாரணை!

nayanthara
விக்னேஷ் மற்றும் நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் இந்த குழந்தைகள் இந்திய சட்ட விதிமுறையை  பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை சுகாதாரத் துறை அமைத்துள்ளது 
 
இந்த குழுவினர் நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் பிறந்த மருத்துவமனையில் விசாரணை செய்யும் என்றும் அதன் பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த குழுவின் விசாரணை முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran