வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

பொங்கல் பண்டிகையின்போது சுவையான இனிப்பு பொங்கல் செய்ய...!!

பண்டிகைகளில் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொங்கல் அன்று மட்டுமல்லாது, மற்ற விழாக்களின் போதும் கூட பொங்கல்  செய்வது வழக்கம். அந்த சுவையான இனிப்பு பொங்கலை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.

 
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 1 கிலோ
பால் - 1/2 லிட்டர்
நெய் - 100 கிராம்
முந்திரி - 100
சுக்கு - சிறிது
ஏலக்காய் - 10
தேங்காய் - 1

செய்முறை:
 
முதலில் அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி, பாசிப்பருப்பை வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரிசி  மற்றும் பால் ஊற்றி அடுப்பில் வைக்கவேண்டும். பால் பொங்கி வரும்போது, அரிசியை போட்டு நன்கு வேகவைக்கவேண்டும்.
 
அரிசி அரை பதத்திற்கு வெந்த உடன், அதனுடன் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும், அதில் வெல்லத்தை (பாகு எடுத்து வடித்து) சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்கவேண்டும். நன்கு வெந்து வந்ததும், பின் வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து கிளறவேண்டும்.
 
பின் ஏலக்காய், சுக்கு பவுடரை சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கும்போது, நெய் சேர்த்து இறக்கவேண்டும். இப்போது சுவையான இனிப்பு பொங்கல் தயார்.