1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (17:27 IST)

நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டபட்டுட்டேன்: மேடையில் கதறி அழுத சமந்தா - வீடியோ!

நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டபட்டுட்டேன்: மேடையில் கதறி அழுத சமந்தா - வீடியோ!
 
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். 
 
இப்படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். இதன் ப்ரோமோஷன் வோழவில் பேசிய சமந்தா திடீரென மேடை அழுதார். அப்போது, 'நான் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். நான் சினிமாவை நேசிப்பதும், சினிமா என்னை நேசிப்பதும் தான் எந்த மாற்றமுமின்றி நிலையாக இருக்கிறது. 
 
சகுந்தலம் படத்தைப் பார்த்தபோது எனது எதிர்பார்ப்பையும் மீறி படம் ஈர்த்தது. இது நிச்சயம் படம் பார்க்கும் உங்களையும் ஈர்க்கும். என கூறி கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.