1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:03 IST)

டோக்யோ பாராலிம்பிக் வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

டோக்யோவில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் போட்டியாளர் இல்லை. அவர் ஜப்பான்வாசியும் இல்லை என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
 
கிட்டதட்ட 160 குழுக்களில் 4,400 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். கோவிட் கட்டுப்பாடு காரணமாக பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.