1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:27 IST)

முதல் பிங்க்பால் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் ஸ்மிருதி மந்தனா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க்பால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அசத்தலான சதமடைத்து சாதனை படைத்துள்ளார்
 
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும், இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்து மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது
 
தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா நேற்று 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் இன்று சதத்தை அடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் 127 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்மிருதி மந்தனா அவுட்டாகி களத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது