1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (17:25 IST)

2 வயது மகளை கால்பந்து உரிமையாளராக்கிய செரீனா!!

செரீனா தனது 2 வயது மகளை மகளிர் கால்பந்து அணியின் உரிமையாளராக்கியுள்ளார். 
 
இந்தியாவில் ஐபிஎல் அணிகளை பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பது போல அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து அணிகளிலுள்ள டீம்களை பிரபலங்கள் ஏலத்தில் எடுத்து வருவது வழக்கம்.
 
அந்த வகையில் டென்னிஸ் வீராங்கனை செரீனா மற்றும் நடாலி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிதாக உருவான அணியை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் செரீனா தனது 2 வயது மகளை அணியின் உரிமையாளராக்கியுள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.