வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (15:02 IST)

ரோகித் தலைமையில் இந்திய அணி; கோஹ்லிக்கு ஓய்வு

ஆசிய கோப்பை 2018 போட்டிகளில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது.


 
ஆசிய கோப்பை 2018 போட்டிகள் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் விளையாடுகிறது.
 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4வது போட்டி நடைபெற்று வருகிறது.
 
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், கேல்.எல்.ராகுல் உள்ளிட்ட பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.