1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : புதன், 22 அக்டோபர் 2014 (18:44 IST)

2015 உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் - ரிக்கிபாண்டிங்

2015 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று நினைக்கிறேன் என்று ரிக்கிபாண்டிங் கூறினார்.
 
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறும் போது 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று நினைக்கிறேன். பேட்டிங்கில் வலுவான இரு அணிகள் மோதுவதை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்பதே எனது கணிப்பாகும். ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த உலக கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.