திங்கள், 29 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:44 IST)

11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம் – டக் அவுட் ஆகி ஏமாற்றிய வீரர்!

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவாத் ஆலம் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இன்று களமிறங்கிய அவர் வெறும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து எல் பி டபுள் யு முறையில் டக் அவுட் ஆனார்.

அவரது பேட்டிங் ஆடும்  முறையும் வித்தியாசமாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னாள் வீரர் சந்தர பால் போல அவர் ஸ்டம்புகளை மறைத்துக்கொண்டு ஆடினார்.