1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (18:11 IST)

ஐபிஎல் போட்டியை நடத்த மற்றொரு நாடு விருப்பம் – சம்மதிக்குமா பிசிசிஐ?

ஐபிஎல் 2020 தொடரை நடத்த நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக லாபம் கொட்டும் விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது அதனால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கணக்கில் கொண்டு எப்படியாவது நடத்தி தீர்வது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் ஆளில்லாத மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது சம்மந்தமாக ஐக்கிய அரபுகள் அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.

நியுசிலாந்தில் கொரோனா வைரஸ் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்நிலையில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்தை பிசிசிஐ பரிசீலிக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.