ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:24 IST)

பேருந்தை ஓட்டி அணி வீரர்களை பயமுறுத்திய தோனி – சகவீரர் சொன்ன ருசிகர தகவல்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணி வீரர்கள் மைதானத்துக்கு செல்லும்போது தானே பேருந்தை ஓட்டி அணி வீரர்களை மிரளச் செய்ததாக லஷ்மன் தெரிவித்திள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்நிலையில் அவருடனான தங்கள் இனிமையான நிகழ்வுகளை சக வீரர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான விவிஎஸ் லஷ்மன் ‘2008 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்னர், அப்போது அணி வீரர்கள் அனைவரும் அணிக்கான பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்,  அப்போது பேருந்து ஓட்டுனரை அவரது சீட்டில் இருந்து நகர்த்திவிட்டு தோனியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். நாக்பூர்  மைதானத்திலிருந்து ஹோட்டல் வரை தோனியே பஸ்ஸை ஓட்டினார்.’ எனக் கூறியுள்ளார்.