1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:50 IST)

பவுலரின் தோளில் மோதிய கோஹ்லி – ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள கொடுத்து எச்சரித்த ஐசிசி !

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் ஹென்ரிக்ஸை தோளில் இடித்தது தொடர்பாக அவருக்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி 20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது கோலி பேட் செய்துவிட்டு ரன் சேர்க்க ஓடிய போது தென் ஆப்பிரிக்க பவுலரான ஹெண்ட்ரிக்ஸ் மீது மோதிவிட்டு ஓடினார்.

இதனையடுத்து ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ன் படி விதிமீறலாகும். இதனால் அவருகுக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய ஒரு தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருமுறையும், உலகக்கோப்பையின் போது ஒருமுறையும் அவர் இதுபோல விதிகளை மீறி 2 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்னுமொரு புள்ளி பெறும் நிலையில் அவர் ஓரிருப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.