செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (13:39 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்திய பெண்கள் கபடி அணி வெற்றி

ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில் இந்திய அணி பெண்கள் பிரிவு, அபார வெற்றி பெற்றுள்ளது.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 
 
இந்நிலையில் கபடிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய மகளிரணி, அசத்தலாக விளையாடி, 43-12 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்தை  எதிர்கொள்கிறது.