1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (17:13 IST)

5 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: முடிவு தெரிந்துவிடுமோ?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. நேற்றுடன் ஐந்து நாள் போட்டி முடிவடைந்து விட்டாலும் மழை காரணமாக போட்டி தாமதம் அடைந்ததால் இன்று ரிசர்வ் டே போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா 2-வது இன்னிங்சை விளையாடி வந்த நிலையில் சற்று முன் வரை இந்தியா 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியா 98 ரன்கள் தற்போது முன்னணியில் உள்ளன
 
தற்போது ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் .இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்துவிட்டால் அதன்பின் இந்தியா வெகுவிரைவில் ஆல் அவுட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 100 முதல் 150 ர்அன்கள் வரை இலக்கு இருந்தால் நியூசிலாந்து இந்த போட்டியை வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஜடேஜாவும், ரிஷப் பண்ட்டும் பொறுமையாக நின்று ஆடி வருவதால் இந்த போட்டி டிரா ஆகவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்