1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (11:52 IST)

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; காலிறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் கால் இறுதி வரை முன்னேறிய இந்திய அணி தோல்வியை தழுவியது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஆர்ச்சரி மிக்ஸ்டு டீம் எலிமினேஷன் சுற்றில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 5 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றதுடன் 3 பாயிண்ட்களில் சீனாவை தோற்கடித்து கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கால் இறுதி போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்ட தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 6-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.

அதேசமயம் பேட்மிண்டனில் சத்விக்சய்ராஜ் – சிராக் செட்டி இணையர் சீனாவை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.