1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (13:17 IST)

வெற்றி விளிம்பில் இந்தியா – பூம்ரா, ஜடேஜா, ஷமி அசத்தல் பவுலிங்

மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற இன்னும் 2 விக்கெட்களே தேவை எனும் நிலையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

கட்ந்த 26 ஆம் தேதி மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வார் (76),கோஹ்லி (82), புஜாரா (106), ரோஹித் (63*) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அதையடுத்து களமிறம்ங்கிய ஆஸி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.. இந்தியாவின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத ஆஸி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் சார்பில் துல்லியமாக பந்து வீசிய பூம்ரா 6 விக்கெட்களை சாய்த்தார். ஜடேஜா இரண்டு விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

291 ரன்கள் பின் தங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து பேட் செய்ய முடிவெடுத்து ஆடியது. இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸியின் பேட் கம்மின்ஸ் இந்திய பேட்ஸ்மேன்களை நிலைக் குலையச்செய்தார்.ஆஸியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் மைதானத்தின் தன்மை மாற்றத்தால் இந்திய அணி தடுமாறியது. 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லி டிக்ளேர் செய்தார்.

இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடின இலக்கோடு களமிறக்கிய ஆஸியில்  பேட் கம்மின்ஸ் (61), ஷான் மார்ஷ்(44), டிராவிஸ் ஹெட் (34) ரன்கள் சேர்த்து ஓரளவிற்குத் தாக்குப் பிடித்தனர். மற்ற வீரர்கள் இந்தியப் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துப் போராடி வருகிறது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களும், பூம்ரா, ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர். இந்தியாவின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்களே தேவையாயிருப்பதால் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.