வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:42 IST)

உதவித்தொகையுடன் பயிற்சி; வீரர்கள் தேடுதல் வேட்டையில் முன்னாள் பயிற்சியாளர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், இளம்வீரர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளார்.

 
தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி பல முன்னேற்றங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவில் இருந்து சிறந்த 6 இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
இதற்காக தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு செய்யப்படும் 3 வீரர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு 2 மாதம் கேரி கிறிஸ்டன் கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி வழங்கப்படும்.