வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (12:22 IST)

முதல் உலக கோப்பை சாதிக்குமா இந்திய அணி!

இன்று வெஸ்ட் இண்டீஸில் உள்ள  கயனாவில் டுவெண்டி -20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது.
இதில் 6 இளம் வீராங்கனைகளுடன் களமிறங்கும் இந்திய அணி இத்தொடரில் வெல்ல வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
 
ஐ.சி.சி சார்பில் பெண்கள் டுவென்டி -20 உலககோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,உடபட மொத்தம் 10 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன.
 
இதுவரை நடைபெற்ற ஐந்து  தொடர்களில் இந்திய அணி வென்றது கிடையாது. இந்நிலையில் இம்முறை மிகத்திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளதால் நிச்சயமாக கோப்பையை வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.