ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (10:51 IST)

நாட்டை விட்டு வெளியேறிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!

இங்கிலாந்து அணியின் முக்கியமான அல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்தவர் லியாம் பிளங்கெட்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இவர் 3 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அமெரிக்காவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு அங்கு கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக அங்கேயே தங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ளார்.