1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:25 IST)

டாஸ் வென்றது சிஎஸ்கே… அணியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சி எஸ்கே அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இன்றைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடக்க உள்ளது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பவுலிங் வீச தீர்மானித்துள்ளது.

சென்னை அணியில் நிகிடிக்கு பதிலாக ஹேசில்வுட்டில் அணியில் இணைந்துள்ளார். அதே போல டெல்லி அணியில் அஷ்வின் மற்றும் அவேஷ் கானுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா மோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் முதிய வீரர்களை மட்டுமே அதிகமாகக் கொண்டுள்ள சி எஸ் கேவுக்கும் இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.