வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது எதனால்...?

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் அபிஷேகப்பிரியர், சிவனுக்கு சங்கினால் அபிஷேகம் செய்தால் பரமானந்தம் வழங்குவார். 


சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து கங்கை சடைமுடியானுக்கு, சங்காபிஷேகம் செய்வது வழக்கம்.
 
சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், சங்கு பூஜையை  மேற்கொள்கிறார்கள். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. 
 
சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக  இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அபிஷேகத்திற்கு சங்கைப் பயன்படுத்தி சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 
 
சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். 
 
சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.