1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Things to do to get Ashta Aiswaryas too !!

அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைப்பதற்கு செய்ய வேண்டியவைகள் !!

அஷ்ட ஐஸ்வர்யங்கள்
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும். அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.
 
தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும். சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க  கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
 
சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளை வழிபட தங்க நகை கிடைக்கும்.
 
தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம் குறையாது. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
 
பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
 
செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும். 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பௌர்ணமி நாள் விரதமுறைகளும் பலன்களும் !!