Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணற்ற பலன்களை தரக்கூடிய பிரதோஷ வழிபாடு !!

Written By Sasikala
Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (13:49 IST)

திங்கட்கிழமையன்று, திங்கள் எனப்படுகிற சந்திரனைச் சூடிய சிவபெருமானுக்கு உரிய, சிவனாரை தரிசிக்கக் கூடிய அற்புதமான நாளாக வழிபட்டு வருகிறார்கள்  சிவனடியார்கள்.
 
சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது பிரதோஷம். அற்புதமான பிரதோஷ நன்னாளில், சிவன் கோயிலுக்குச் செல்வதும் நந்திதேவரையும்  சிவலிங்கத் திருமேனியையும் தரிசிப்பதும் புண்ணியத்தைத் தந்தருளும் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்.
 
பிரதோஷ தரிசனம், நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. முற்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் போக்கவல்லது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியவை.
 
பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்வோம். சிவது சிவனருளைப் பெறுவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, சிவனாருக்கு வில்வம் சார்த்தி   வணங்குவோம். 
 
பிரதோஷ நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும்  அபிஷேகத்தையும் கண் குளிரத் தரிசிப்போம். 

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments