வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி பகவானின் அருளைப்பெற காகத்திற்கு உணவு அளிப்பது நல்லதா...?

வீட்டில் எவ்வளவு தான் அதிக கஷ்டங்கள் இருந்தாலும் இந்த பரிகார முறைகளை செய்வதின் மூலம் சரிசெய்யலாம். 

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள விளக்கேற்றி உங்களின் விருப்ப கடவுளை வழிபட்டு விட்டு காகத்திற்கு சிறிதளவு காய்ந்த  திராட்சையை உணவாக அளிக்க வேண்டும். தினமும் இதை செய்து வருவதன் மூல எல்லா கஷ்டங்களும் மறைந்து நல்லதே நடக்கும்.
 
உலர் திராட்சை வாங்கி இதை செய்ய முடியாதவர்கள் காலையில் வெள்ளை நிற சோறு பொங்கி நாம் சாப்பிடுவதற்கு முன்னதாக அதில் சிறிது எள்ளை கலந்து காகத்திற்கு உணவாக அளிக்கவேண்டும். பின்னர் காகம் அதை சாப்பிட்டதற்கு பின் நாமும் சாப்பிடலாம். இதன் மூலம்  எல்ல சனிபகவானின் அருள் மட்டுமில்லாமல் நம்முடைய முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் வாழ்வில் எளிதாக  முன்னேற முடியும்.
 
காக்கைகளை உணவளிப்பது மட்டுமில்லாமல் அதை வணங்கினால் சனி பகவானை வணங்கியது போன்ற பலனை கொடுக்கும். மேலும்  காகமானது சனி பகவானின் வாகனம் ஆகும். எனவே காகத்திற்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி அளிக்குமாம். கால்கள்  ஊனமுற்ற திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வதன் மூலம் சனிபகவானின் அருளை பெறமுடியும்.