1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியில் விரதம் இருக்கும் முறைகள்...!!

பௌர்ணமியில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்ள வேணடும். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு  உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்தல் நன்று.

ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன. ஆனி மாத  பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.

வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை  செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
 
பலன்கள்:
 
இந்த ஆனி பௌர்ணமி வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும்.
 
ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்ய பலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனி பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர்.