தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே. ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான். பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது. மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை. பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு...