திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (13:38 IST)

ஈசிஆர்-ல் வேலைக்காரியுடன் உல்லாசம்: ரகசிய வீடியோவால் நேர்ந்த விபரீதம்!

மனைவி ஊருக்கு சென்றதும், வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்து மானத்தையும் பணத்தையும் இழந்து போலீஸில் புகார் அளித்துள்ளார் ஒரு இளைஞர். 
 
சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சம்மர் வெகேஷனுக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்களின் வீட்டில் சித்திர வள்ளி என்பவள் வீட்டு வேலையாளாக பணியாற்றி வந்துள்ளார். 
 
மனைவி ஊரில் இல்லாததால் இருவரும் தகதாக உறவில் அடிக்கடி ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறிப்பிட்ட நாளன்று சித்திர வள்ளியின் உறவினர் ஒருவர் அவளை தேடி அங்கு வந்திருந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதை கண்டு, அதனை வைத்து மனோஜை மிரட்டி ரூ.20,000 பணமும், ரூ.2 லட்சத்திற்கு செக்கும் வாங்கிக்கொண்டு சித்திர வள்ளியை அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து சித்திர வள்ளி மனோஜை தொடர்புக்கொண்டு ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். மனோஜ் இதை தர மறுக்கவே, நீ என்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக வைத்துள்ளேன் பணத்தை கொடுக்காவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 
 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ் வேறு வழியில்லாமல் போலீஸில் புகார் அளித்துள்ளார். மனோஜ் புகார் அளித்ததை தெரிந்துக்கொண்ட சித்திர வள்ளி மற்றும் அவரது உறவினர் தற்போது தலைமறைவாகியுள்ளனர். போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.