1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (19:36 IST)

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி எரித்துக்கொன்ற இளைஞர்கள் ...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார் பாளையத்தில் இளைஞர்கள் இருவர் சேர்ந்து ஒரு இளம்பெண்ணை கர்ப்பமாக்கி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார் பாளையத்தில் உள்ள ஓடைப்பகுதியில் இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கூனிமேடு என்ற பகுதியில் வசித்துவந்த பெண் லட்சுமி என்று கண்டுபிடித்தனர். 

மேலும் இதுகுறித்து தீவிரமாக போலிஸார் விசாரித்தனர். அதில் கடந்த 5 வருடங்களாக லட்சுமியை காதலித்து வந்த அருண் என்பவர் அவரை கர்ப்பமாக்கியதாகத் தெரிகிறது. எனவே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு லட்சுமி அருணிடம் கேட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அருண் தனது நண்பரான ரகுமானுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பொம்மையார் பாளையத்திலுள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று லட்சுமியை கொலைசெய்துள்ளனர். இந்தக் கொலை யாருக்கும் தெரியாதிருக்க பெண்ணில் உடல்மீது பெட்ரொல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். தற்போது இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.