1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (18:57 IST)

மே16 முதல் மே21ம் தேதி வரை பந்த்: அதிரடி அறிவிப்பு

bandh
மே 16ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு பந்த் என திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்கனவே பின்னலாடை உற்பத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்
 
இந்த நிலையில் திருப்பூரில் வரும் மே 16ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என்றும் நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் பந்த் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது