1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (20:18 IST)

மகளிர் உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வரவு- தமிழக அரசு

magalir urimai thogai
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இன்று இத்திட்டம் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள்  வங்கிக் வரவு வைக்கப்பட்டும் இதை வங்கிகளில், ஏடிஎம் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்''   தெரிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில்,  நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

‘’கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான தொகை ரூ.1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.,  முறையான வங்கிக் கணக்கில்லாத 87.785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தமிழக அரசு அனுப்பட்டுள்ளது.