வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:33 IST)

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த கனிமொழி: கண்ணீரில் காதல் கணவன்!

மதுரையில் ஜிம் பயற்சியாளருடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தருமாறு காதல் கணவன் கோரிக்கை. 
 
மதுரையை சேர்ந்த ராஜேஷ் ஊன்று வருடங்களுக்கு முன்னர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விமான நிலையத்தில் பணியாற்றி வரும் இவருக்கு குழந்தையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றதில் கனிமொழி வயிற்றில் நீர்கட்டி இருப்பதால் சிக்கல் உள்ளது என கூறி உடற்பயிற்சியில்  நீர்கட்டியை கரைக்க பரிந்துரைத்துள்ளனர். 
 
இதனால் ஜிம்மில் சேர்ந்த கனிமொழிக்கு இம் உரிமையாளர் யோகேஷ் கண்ணன் பயிற்சி கொடுத்துள்ளார். பயிற்சியில் துவங்கிய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து ஒரு கட்டத்தில் ராஜேகிற்கு தெரியவர கனிமொழியை கண்டித்துள்ளார். கனிமொழி இது குறித்து கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். 
 
உடனே அவனும் வீடு புகுந்து ராஜேஷை அடித்து இருவரும் ஓட்டம் பிடித்துள்ளான். தற்போடு இது குறித்து ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது காதல் மனைவிக்காக காத்துகிடக்கிறார்.