1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (14:32 IST)

நள்ளிரவில் கண் அசந்த வேளையில் ’அந்த வேலையை ’முடிப்பவர்கள் யார்...?

தேனி மாவட்டத்தில் சில சமூக விரோதிகளின் அட்டூழியம் தலைதூக்கியுள்ளதாக அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் குறிப்பாக போடி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் நிறுத்தப்படுகின்ற ஆட்டோக்களுக்கு நள்ளிரவு நேரத்தில் தீ  மூட்டப்படுவது வாடிக்கையாக மாறிவருகிறது.
 
கடந்த வாரத்தில் சில்லூவார்பட்டியைச் சேர்ந்த காளி என்பவர் தன் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு யாரோ தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இந்நிலையில் வாகனங்களையே குறிவைத்து தீமூட்டி வரும் மர்ம நபரை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பொதுமக்களின் புகாரை ஏற்ற போலீஸார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.