ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (20:38 IST)

விதிமுறை மீறல்...சென்னையில் இரண்டே நாளில் 2 கோடி அபராதம் வசூல்

சென்னையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இரண்டே நாளில் ரூ.1.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை5, 08,511  ஆக அதிகரித்துள்ளது.
.
இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8434 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று 5799 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 453165 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 991 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,49,583 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றைத் தவிர்க்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இரண்டே நாளில் ரூ.1.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவர்கல், தனி மனித இடைவெளி பின்பற்றாதவர்களிடன் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.