வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:04 IST)

”எனது கொம்பன் காளைகள் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”.. விஜயபாஸ்கர் பெருமிதம்

”அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது 3 கொம்பன் காளைகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள் சீறி வரும் காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளை எந்த வீரராலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து அவர், “ஜல்லிக்கட்டின் வீரரும் பெருமையும் தொடர்ந்து நிலைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒன்று. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது கொம்பன் காளைகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.

இதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையையும் எந்த வீரராலும் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.