1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (21:12 IST)

ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். ஒருசில பள்ளிகள் திறக்காமல் பூட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு விஜய் ரசிகர்கள் தங்கள் செலவில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளனர். இந்த இருவரும் அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி தருவதால் வேலைநிறுத்தத்தின் பாதிப்பு அந்த பள்ளியில் தெரியவில்லை.

போராட்டம் நீடித்தால் இன்னும் ஒருசில பள்ளிகளிலும் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் விஜய் ரசிகர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.