வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:36 IST)

வருமான வரி அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஜய் ஆடிட்டர்!

வருமான வரி அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஜய் ஆடிட்டர்

நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அவர் வீட்டில் ஆவணங்கள் மற்றும் பணத்தை கைப்பற்றவில்லை ; ஆயினும் பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் ரூ. 70 கோடிக்கு மேல் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். முப்பது மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அடுத்த நாள் விஜய்’ மாஸ்டர் ’படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
 
வருமான வரி கட்டாத ரஜினிக்கு சலுகை காட்டி, விஜய் மீது மட்டும் நடவடிக்கை பாய்வது ஏன் என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில்  நடிகர் விஜய், பைனான்சியர் அன்பு செழியன், ஆடிட்டர்கள் ஆஜர் ஆகியுள்ளனர்.