1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (15:51 IST)

விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர்..!! பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்..!!!

piyus goyal
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அஞ்சலி செலுத்தினார்.
 
உடல்நலக்குறைவால் காலமான நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உடல் கடந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
 
soori
நடிகர் சூரியும் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில்  சென்று பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.