1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (14:53 IST)

தண்டவாளத்தின் குறுக்கே மாடு வந்ததால் தடம் புரண்ட சரக்குரயில்!

தண்டவாளத்தின் இடையே மாடு புகுந்ததால் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது 
 
இதனை அடுத்து அந்த பகுதிக்கு செல்லும் ரயில்கள் காலதாமதமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தடம் புரண்ட சரக்கு ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்க ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்த பணி முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது 
 
மாடு குறுக்கே வந்ததால் சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.