1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (12:38 IST)

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

courtralam
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதன் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்தருவியில் மட்டுமே குளிக்க அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இதனால் குற்றாலத்தில் குவிந்து உள்ள சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran